Thursday, May 13, 2010

காய்கறி வடை

காய்கறி வடை
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:- 

உளுந்தம்பருப்பு - 100 கிராம் 
கடலை பருப்பு - 100 கிராம் 
காய்கறிகள் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது) 
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது 
இஞ்சி - சிறிய துண்டு நறுக்கியது 
மிளகாய் - 2 
சீரகம் - சிறிதளவு 
பெருங்காயம் - சிறிதளவு 
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) 
கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) 
எண்ணெய் - 1/2 லிட்டர் 
உப்பு - தேவையான அளவு
செய்முறை
செய்முறை:- 


1. உளுந்தம் பருப்பையும், கடலை பருப்பையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, முக்கால் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். 


2. இதனுடன் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், இஞ்சி, பெருங்காயம், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். (தேவைப்பட்டால் மிளகாய், இஞ்சியை அறைத்தும் சேர்க்கலாம்) 


3. ஒரு வாழை இலை அல்லது மொத்தமான பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டி, வாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும். 


4. இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்

பால் பாயசம்

பால் பாயசம்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:- 

அரிசி - 200 கிராம் 
பால் - 1 லிட்டர் 
சர்க்கரை - 250 கிராம் 
பாதாம், முந்திரி - 15 
ஏலக்காய் - 5 (பொடி செய்தது) 
திராட்சை - 15 
நெய் - 50 கிராம்
செய்முறை
செய்முறை:- 


1. பெரிய பாத்திரத்தில் பாலை கொதிக்க விடவும். கொதித்த பின் பாதி பாலை தனியே எடுத்து வைத்து விடவும். 


2. மீதியுள்ள பாதி கொதித்த பாலில் கழுவிய அரிசியைச் சேர்த்து (ஊற விட வேண்டாம்) 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இடையிடையே கிளறி விடவும். 


3. பிறகு தனியே எடுத்து வைத்த பாலை சிறிது சிறிதாக அவ்வப்போது சேர்த்து சீராக கலந்து விடவும். 


4. அரிசி குழைய வெந்தவுடன் லேசாக மசித்து சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கலந்து விடவும். 


5. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். 


6. பொடி செய்த ஏலக்காயை சிறிது தூவி இறக்கி வைக்கவும்.

Thursday, May 6, 2010

ஜவ்வரிசி பாயசம்

தேவையான பொருட்கள்

சேமியா – 100 கிராம்
ஜவ்வரிசி – 100 கிராம்
சர்க்கரை – 250 கிராம்
முந்திரி – 15
ஏலக்காய் – 5 (பொடி செய்தது)
திராட்சை – 15
நெய் – 50 கிராம்

செய்முறை

1. முதலில் ஜவ்வரிசியை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு சேமியாவை சுடு தண்ணீரில் போட்டு வேகவைத்து பின்பு வடிகட்டி சேமியா சூடாக இருக்கும் போது பாதி அளவு சர்க்கரையை இதில் கலந்து வைக்கவும்.

3. பிறகு ஜவ்வரிசி வேகவைத்த தண்ணீரில் சர்க்கரை சேர்த்த சேமியாவை கொட்டி கிளறி விட வேண்டும்.

4. பிறகு சர்க்கரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

5. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

6. பொடி செய்த ஏலக்காயை சிறிது தூவி இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. சேமியாவை சுடு தண்ணீரில் வேக வைத்து வடிகட்டி சர்க்கரை அதில் தூவுவதனால் சேமியா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.

2. தேவையானால் பால் சேர்த்து செய்யலாம்.

மசாலா பூரி

தேவையான பொருட்கள்

கோதுமை – ஒரு டம்ளர்
பட்டர் – இரண்டு மேசை கரண்டி
தயிர் – இரண்டு தேக்க்ரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மசாலாவிற்கு
கருப்பு எள் – ஒன்னறை தேக்கரண்டி
வெள்ளை எள் – ஒன்னறை தேக்கரண்டி
ஓமம் – அரை தேக்கராண்டி
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
எண்ணை – பூரி சுட தேவையான அளவு

செய்முறை

1.கொடுக்க பட்டுள்ள மசாலாவை லேசாக வருத்து கொள்ள வேண்டும்.

2.பிறகு மைதா,கோதுமையை கலந்து அதில் உப்பு,தயிர்,பட்டர் உருக்கி போட்டு,மிளகாய் தூளும் சேர்த்து வருத்து வைத்துள்ளதையும் போட்டு நல்ல பிசறி தேவைக்கு தண்ணிர் சேர்த்து நன்கு கெட்டியக பசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

3.பிறகு பூரிகளாக பொரித்தெடுக்கவும்.

மாம்பழ அல்வா

தேவையான பொருட்கள்

மாம்பழம் – 1(கனிந்தது)
ரவை –150 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
நெய் – தேவையான அளவு
முந்திரிப் பருப்பு – சிறிது
ஏலக்காய்த்தூள் – சிறிது

செய்முறை

1.மாம்பழத்தைத் தோல் நீக்கி சிறுதுண்டுகளாக வெட்டி விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த விழுது குறைந்தது 300 கிராம் இருக்க வேண்டும்

2. வாணலியில் ரவையை இலேசாக வறுத்து அதைப் பொடித்துக் கொள்ள வேண்டும்

3.வாணலியில் மாம்பழ விழுதைப்போட்டு சிறு தீயில் இலேசாக வதக்கவும்

4. அதில் ரவை,சர்க்கரை போட்டு நன்றாகக் கிளறவும்.அத்துடன் நெய் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்

5.முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் தூவி நெய் தடவிய தட்டில் ஊற்றிச் சமமாகப் பரப்பி விடவும்

ஜவ்வரிசி முறுக்கு

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 1 கோப்பை
அரிசி மாவு – 6 கோப்பை
கடுகு – சிறிதளவு
எலுமிச்சைம்பழம் – 1
புளித்த தயிர் – 1 கோப்பை
பச்சைமிளகாய் – 3
பெருங்காயம் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. முதல் நாள் இரவே ஜவ்வரிசியை நன்கு கழுவி புளித்த தயிரில் ஊற வைக்கவும்.

2. ஊறிய ஜவ்வரிசியுடன் உப்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

3. சிறிது எண்ணெயைச் சூடாக்கி கடுகு போட்டு தாளித்து விழுதில் சேர்க்கவும்.

4. பின்னர் எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து இந்த விழுதுடன் சேர்க்கவும்.

5. அதனுடன் அரிசி மாவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாவை 3 அல்லது 4 பாகமாக பிரித்துக் கொள்ளவும்.

6. பின்னர் ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து தண்ணீர் தெளித்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.

7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

8. முறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.

9. பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.

10. இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.

11. முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்.

12. முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.

Monday, May 3, 2010

நெல்லிக்காய் சாதம்


தேவையான பொருட்கள்

சாதம் – 1 கோப்பை
பெரிய நெல்லிக்காய் – 6
வர மிளகாய் – 5
கறிவேப்பிலை – 2 கொத்து
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
நெய் – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. நெல்லிக்காயை பொடியாகத் துருவி, கொட்டையை எடுத்து விடவும்.

2. வேக வைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு தாளிக்கவும்.

4. அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளறி, சிறிது நேரம் (2 அல்லது 3 நிமிடம்) வதக்கியதும், நெல்லிக்காய் வாசம் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

5. அடுப்பில் இருந்து இறக்கிய நெல்லிக்காய் கலவையுடன் ஆற வைத்த சாதம் சேர்த்து, சாதம் குலையாமல் நன்கு கிளறவும்.

6. தனியே சிறிது நெய்யில் பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கிளறிய சாதத்துடன் சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும்.

குறிப்பு

1. நெல்லிக்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி சுவையாக இருக்கும்.

2. நெல்லிக்காயைத் துருவும் போது மிகவும் பொடியாகத் (இஞ்சி துருவலில்) துருவிக் கொள்ளவும். அப்படி பொடியாகத் துருவினால் சாதத்துடன் நன்றாக கலந்துவிடும்.

3. தேவைப்பட்டால் பொட்டுக்கடலையுடன், முந்திரி மற்றும் நிலக்கடலையும் நெய்யில் வறுத்துச் சேர்த்துக் கொள்ளலாம்.

4. தாளிக்கும் போது வர மிளகாய்க்குப் பதில் பச்சை மிளகாயும் சேர்த்துச் செய்யலாம்

சிக்கன் கிரேவி



  
கோழி - 200 கிராம் 
சின்ன வெங்காயம் - 15 
தக்காளி - 2 
தேங்காய் - கால் கப் 
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி 
பச்சை மிளகாய் - 3 
பட்டை - 3 துண்டு கிராம்பு - 4 
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி 
உப்பு - ஒரு தேக்கரண்டி 
எண்ணெய் - 1 கப்
கோழியை கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் வெங்காயத்தை போட்டு தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதிலேயே தக்காளியை போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காயை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, தாளித்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.அதனுடன் வெங்காய விழுதை போட்டு 3 நிமிடம் வதக்கவும். அதில் தக்காளி விழுதையும் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கவும்.பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியவுடன். உப்பு போட்டு நன்கு கிளறவும்.வ
3 நிமிடம் கழித்து கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு நன்கு பிரட்டி விடவும்.அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி 10 நிமிடம் வேக வைக்கவும்.சிக்கன் வெந்ததும் அதில் தேங்காய் விழுதை ஊற்றி கிளறி விடவும்.சிக்கனிலுள்ள தண்ணீர் முக்கால் பாகம் வந்தவுடன் அதில் புதினா இலைகளை போட்டு கிளறி விடவும். மீண்டும் 10 நிமிடம் வேக விட்டு கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து விடவும். .... 
 

காய்கறி சாதம்


தேவையான பொருட்கள்

சாதம் – 2 கோப்பை
கேரட் – 1
பீன்ஸ் – 50 கிராம்
குட மிளகாய் – 1
முட்டைக்கோஸ் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காய் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1
பட்டை – 2
கிராம்பு – 3
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 1
தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. சாதத்தை கொஞ்சம் விறைப்பாக வடித்து ஆற வைக்கவும்.

2. கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குட மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

4. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்.

5. பிறகு நறுக்கிய காய்கறிகளைப் போட்டு சிறு தணலில் நன்றாக வதக்கவும்.

6. அதனுடன் சிறிது சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அடிக்கடி கிளறி விடவும்.

7. பிறகு தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.

8. அடுத்து ஆறிய சாதத்தைப் போட்டு குழையாமல் கிளற வேண்டும்.

9. இதனுடன் மிளகு தூளைச் சேர்த்து கிளறி, சிறிது நேரம் சிறு தணலில் வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. சாதம் விறைப்பாக இருந்தால் தான் காய்கறி சாதம் சுவையாக இருக்கும்.

2. வெள்ளை மிளகுத் தூள் சேர்த்தால் சாதம் நிறம் மாறாமல் இருக்கும்.

3. காய்கறிகளை தனியாக வேக வைத்து, பின்னர் சேர்த்தும் செய்யலாம்.

Wednesday, April 28, 2010

கிட்னி ஃபிரை


தேவையான பொருட்கள்

ஆட்டு கிட்னி – கால் கிலோ
உப்பு தூள் – அரை தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – முக்கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது
புதினா – முன்று இதழ்
பச்சை மிளகாய் – ஒன்று
வெங்காயம் – ஒன்று
பட்டை – சிறிய துண்டு (கால் இன்ச் அளவு)
கரம் மசாலா தூள் – ஒரு சிட்டிகை
தக்காளி ஒன்று – சிறியது
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
நெய் – கால் தேக்கரண்டி

செய்முறை

1. முதலில் கிட்னியை நடுவில் இருக்கும் கொழுப்பை மட்டும் அகற்றி விட்டு இரு முறை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.

2. பிறகு மறுபடி இருமுறை கழுவி தண்ணீரை வடிய விடவும்.

3. கிட்னியில் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். தக்காளியை நான்கு துண்டாக வெட்டி அதில் போடவும்.

4. அவற்றை ஐந்து நிமிடம் ஊறவைத்து, குக்கரில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல், முன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

5. இப்போது அதில் நிறைய தண்ணீர் நிற்கும் அதை வற்ற விடவும்.

6. தனியாக ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி பட்டை, வெங்காயம் மீடியமாக அரிந்து சேர்த்து தாளிக்கவும்.

7. வற்றிய கிட்னியை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, பச்சை மிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து, கொத்துமல்லி, புதினா, நெய், சேர்த்து, கரம் மசாலா, தூவி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. கிட்னியை சரியாக கழுவ வில்லை என்றால் செய்யும் போது ஸ்மெல் வரும். ரொம்ப நேரம் வேக விட்டால் ரொம்ப கல்லு மாதிரி ஆகிடும்.

2. இதை குக்காரில் வேக வைத்து செய்வதால் குழந்தைகளுக்கு கடித்து சாப்பிட சுலபமாக இருக்கும். குழந்தைகளுக்கு இதை ஸ்மால் சிக்கன் என்று சொல்லி கொடுங்கள்.

3. காஷ்மீரி சில்லி பொடி என்பது நல்ல கலராக இருக்கும் காரம் அவ்வளவாக இருக்காது. அது கிடைக்க வில்லை என்றால் சாதா மிளகாய் தூளே போதுமானது. இதே போல் மிளகு சேர்த்தும் செய்யலாம்.

4. குழந்தைகளுக்கு, பிள்ளை பெற்றவர்களுக்கு நெய்யிலேயே கூட செய்து கொடுக்கலாம்.

Sunday, April 25, 2010

அவல் கேக்


தேவையானப் பொருட்கள்:
அவல் 400 கிராம்
சீனி 250 கிராம்
நெய் 100 மி.லி.
முந்திரி பருப்பு 50
ஏலக்காய் 5
கேசரிப் பவுடர் ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் ஒரு மூடி
செய்முறை:


அவலை நன்றாகப் புடைத்து, கல் நீக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நெய்யை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும், அவலைப் போட்டு, நன்றாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். அவலை வறுத்து எடுத்து அதே வாணலியில் மேலும் சிறிது நெய் விட்டு, முந்திரி பருப்பையும், தேங்காயை துருவலையும் வறுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சீனியை அதில் கொட்டி கரைத்து அடுப்பில் வைக்கவும். 
சீனிக் கரைசல் நன்றாகக் கொதித்து பாகாக இறுகி வரும்.பாகு கம்பி பதமாக வரும் பொழுது பொரித்து வைத்துள்ள அவல், சீனி,நெய், முந்திரி பருப்பு, ஏலக்காய் பொடி கேசரிப் பவுடர், தேங்காய் பூ ஆகியவற்றை ஒன்றாகக் கொட்டி நன்றாகக் கிளறிவிட வேண்டும்.பதமாக வந்ததும், இறக்கி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, சமமாகப் பரப்பி, கேக்குகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதுவே அவல் கேக் என்பது சாப்பிட இனிப்பாய், சுவையாய் இருக்கும். திருவிழா நாட்களில் செய்து சாப்பிட ஏற்றதொரு பலகாரம்.

பப்பாளி பழ அல்வா

தேவையான பொருட்கள்
பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் : 4 தே. கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி - சிறிதளவு
முந்திரி - 7
பாதாம் பருப்பு - 7
செய்முறை
பப்பாளி பழ அல்வா
1. முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
2. பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.
3. அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.
4. பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
5. பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
6. அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.
7. பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
8. பப்பாளி பழ அல்வா தயார்.

குறிப்பு:
பப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்)
பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
பழம் கிடைக்கவில்லையென்றால் பப்பாளிக்காயிலும் செய்யலாம்.


* பப்பாளிக்காயை தோல் நீக்கி துறுவிக்கொள்ளவும்.
* சர்க்கரை 2 கப் பப்பாளிக்கு 1 கப் வீதம் போடலாம். (காயில் இனிப்பு குறைவு)
* நிறத்துக்கு சிறிதளவு கேசரிபொடி உபயோகிக்கலாம்.
* மற்ற செய்முறை மேற்கூறியவாறுதான்.

கொத்து பரோட்டா

 
தேவையான பொருட்கள்

பரோட்டா - 6
முட்டை - 4
வெங்காயம் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - ஒரு கொத்து
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
பரோட்டா குருமா - 3 மேஜைக் கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

3. பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

4. அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும்.

5. பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும்.

6. முட்டை வெந்ததும் அதில் பரோட்டா குருமா மூன்று கரண்டி சேர்த்து கிளறவும். (பரோட்டா குருமா இல்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.)

7. பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.

6. கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

கட்லெட்

தேவையான பொருட்கள்
  உருளைக்கிழங்கு : 7
குடைமிளகாய் : 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
கேரட்,பீட்ரூட்,பட்டாணி போன்ற விருப்பமான காய்கறிகள் : 2 கப் (நன்றாக நறுக்கியது)
பிரட் கிரம்ஸ் : 1 கப்
சோளமாவு/மைதா மாவு : 2 அல்லது 3 ஸ்பூன்
எண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
சிறிதளவு சோம்பு (உடைத்தது)
செய்முறை
கட்லெட்
செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தண்ணீர்விடாமல் கெட்டியாக மசித்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு பின்னர் குடைமிளகாய், காய்கறிகளை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி முக்கால் பாகம் வேகும் வரை வைத்திருக்கவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது)

இந்த காய்கறிக் கலவையை மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக பிசையவும். மிகவும் இலகுவாக இருந்தால் சிறிதளவு சோளமாவு சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு அகலமான தட்டில் பிரட் கிரம்ஸ் கொட்டி பரவலாக வைக்கவும். மற்றொரு தட்டில் சிறிதளவு தண்ணீருடன் சோளமாவு/மைதாமாவு சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.

காய்கறிக் கலவையை சிறிய உருண்டைகளாக்கி தட்டி(வடைக்கு செய்வது போல் சற்று தடிமனாக) அதனை சோளமாவு கலவையில் புரட்டி பின்னர் பிரட் கிரம்ஸில் புரட்டி தனியாக வைக்கவும்.(மாவு இலகுவாக இருந்தால் புரட்டும்போது உடைந்துகொள்ளும் கவனமாக செய்யவும்)

எல்லா கலவையும் இப்படி செய்து முடித்தபின் இந்த கட்லெட் டை அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து எடுக்கவும்.

பின்னர் ஒரு தோசைக்கல்லில் சிறிது எண்ணைவிட்டு கட்லெட்டுகளை போட்டு செந்நிறாமாக வருத்து எடுக்கவும். ஒரு பக்கத்துக்கு சுமார் 2 நிமிடம் இருந்தால் போதும்.

சுவையான கட்லெட்டை டொமாடோ சாஸுடன் பரிமாரவும்.

சோயா பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 தம்ளர்
சோயா - 1 தம்ளர்
கொழுப்பு நீக்கப்பட்ட பால் - 1/2 தம்ளர்
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி.
செய்முறை

1. சோயாவை ஒன்றிரண்டாக உடைத்து, தோலை புடைக்கவும்.
2. அரிசியை சோயாவுடன் சேர்த்து, பாலுடன் 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்.
3. உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, பொங்கலுடன் சேர்க்கவும்.
4. நல்லெண்ணய்யில் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் வறுத்து, பொங்கலில் கொட்டி, நன்கு கிளறி, 5 நிமிடம் அடுப்பில் வைத்திருந்து (சிம்மில்) இறக்கவும்.