தேவையானப் பொருட்கள்:
அவல் 400 கிராம்
சீனி 250 கிராம்
நெய் 100 மி.லி.
முந்திரி பருப்பு 50
ஏலக்காய் 5
கேசரிப் பவுடர் ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் ஒரு மூடி
சீனி 250 கிராம்
நெய் 100 மி.லி.
முந்திரி பருப்பு 50
ஏலக்காய் 5
கேசரிப் பவுடர் ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் ஒரு மூடி
செய்முறை:
அவலை நன்றாகப் புடைத்து, கல் நீக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நெய்யை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும், அவலைப் போட்டு, நன்றாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். அவலை வறுத்து எடுத்து அதே வாணலியில் மேலும் சிறிது நெய் விட்டு, முந்திரி பருப்பையும், தேங்காயை துருவலையும் வறுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சீனியை அதில் கொட்டி கரைத்து அடுப்பில் வைக்கவும்.
சீனிக் கரைசல் நன்றாகக் கொதித்து பாகாக இறுகி வரும்.பாகு கம்பி பதமாக வரும் பொழுது பொரித்து வைத்துள்ள அவல், சீனி,நெய், முந்திரி பருப்பு, ஏலக்காய் பொடி கேசரிப் பவுடர், தேங்காய் பூ ஆகியவற்றை ஒன்றாகக் கொட்டி நன்றாகக் கிளறிவிட வேண்டும்.பதமாக வந்ததும், இறக்கி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, சமமாகப் பரப்பி, கேக்குகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதுவே அவல் கேக் என்பது சாப்பிட இனிப்பாய், சுவையாய் இருக்கும். திருவிழா நாட்களில் செய்து சாப்பிட ஏற்றதொரு பலகாரம்.
No comments:
Post a Comment